மத்திய அரசு துறையில் 24,368 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க நவ.30 கடைசி தேதி!
மத்திய பணியாளர் தேர்வாணையமான (SSC) மத்திய காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
SSC GD:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மத்திய காவல் துறையில் காலியாக உள்ள GD கான்ஸ்டபிள் 24,368 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் விண்ணப்பிக்க விரும்புபவர்களது வயது வரம்பு 18 முதல் 23 வரை இருக்க வேண்டும். இதில் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். தற்போது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது. வரும் நவ.30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். SC/ST பிரிவினர் மற்றும் இதர பிரிவு பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மத்திய அரசு “இதற்கு” எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்த SSC GD தேர்வானது கணினி வழியாக நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதில் 160 மதிப்பெண்களுக்கு பொது அறிவு, திறனறிதல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படும்.