இனி 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறக்க அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரியில் இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கையின் அடிப்படையில், அனைத்து கடைகளும் 24 மணி நேரமும் திறந்திருக்க அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. மேலும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு அனுமதி:
சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கும் புதுச்சேரியில் இரவு பகல் பார்க்காமல் பல ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதனால் இரவு முழுவதும் கடைகளை திறக்க வேண்டும் என புதுச்சேரி வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கையின் அடிப்படையிலும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள் அனுமதி வழங்கி உள்ள நிலையில், தற்போது தொழில்துறை சார்பு செயலர் முத்துமீனா புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதில் புதுச்சேரியில் இயங்கி வரும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் 24 மணி நேரமும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெளியான இந்த நடைமுறையானது அடுத்த 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறைக்கான சில வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி இந்த நடைமுறை 10-க்கும் அதிகமான ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களில் மட்டும் அமல்படுத்த வேண்டும்.
கிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்க இது தான் நல்ல சான்ஸ்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலாக பணிபுரிவதை குறிப்பிடாமல் இருந்தால், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது மேலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர்கள் எந்த நேரத்திலும் இரவு 10 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை எனவும், இரவில் பெண் ஊழியர்களை பணியமர்த்துவதற்கு எழுத்துப்பூர்வ ஒப்புதலும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.