தமிழகத்தில் 2382 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளை தொற்றும் கருப்பு பூஞ்சை வைரஸ் தாக்கத்தால் இதுவரை 2382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கருப்பு பூஞ்சை:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நீரிழிவு நோயாளிகளை கருப்பு பூஞ்சை வைரஸ் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய் கண், நுரையீரலை அதிகம் பாதிக்கிறது.
10 ரூபாய்க்கு LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் – ஜூன் 30 கடைசி நாள்!
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள் மற்றும் அதிகமாக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் 2 பங்கு பேர் நீரிழிவு நோயாளிகள் ஆவர். உலகளாவிய அளவில் 17 லட்சம் மக்கள் தொகையில் 0.005 சதவீதம் பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் இதுவரை இந்த நோயால் 2382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதில் 111 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.