TN TRB 2,331 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – நேர்முகத் தேர்வு நடத்த கோரிக்கை!
தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேர்முகத் தேர்வை நடத்த தேவையான பணிகளை தேர்வு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்று தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டிஆர்பி தேர்வு:
தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TN TRB) தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அக்.18 முதல் 9 – 12 வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில பணிக்குழு முக்கிய முடிவு!
அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு விண்ணப்ப பதிவு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு இணையவழியில் சுமார் 44,000 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு விண்ணப்பித்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் நேர்முகத் தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை. இதனால் பட்டதாரிகள் தங்களுக்கு வேலை கிடைக்குமா? என்ற அச்சத்தில் உள்ளனர். விண்ணப்ப பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் பணிகள் 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிந்து விட்டன.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
இதற்கு விரைவில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேர்முகத் தேர்வை நடத்துவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருகிறது. இது தொடர்பாக தேர்வு வாரியத்தின் தகவல் மையத்தை தொடர்பு கொண்டாலும் உரிய பதில் அளிப்பதில்லை என்று டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் கூறுகின்றனர். மேலும் உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வை விரைவாக நடத்தும் நடவடிக்கைகளை தேர்வு வாரியம் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Need pressure for trb of arts and Science college