தமிழகத்தில் இப்பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு – 23 பேருக்கு கொரோனா தொற்று!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 23 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.
மாணவர்களுக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் வெகு நாட்களுக்கு பிறகு முதல் கட்டமாக 1 முதல் 12ம் வகுப்பு வரை படிப்படியாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மூன்றாம் அலை கொரோனா குழந்தைகளை பாதிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில் அரசின் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழக சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு – டிச.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பள்ளியில் 23 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்பட்டுள்ளது. தாராபுரம் பகுதியில் மக்களுக்கு அதிகம் சளி, காய்ச்சல் இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து சுகாதாரத் துறையினர் அப்பகுதி மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 27ம் தேதி தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
அதனால் தொற்று பாதிப்பு ஏற்பட்ட மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் முயற்சியில் சுகாதாரத் துறையினர் இறங்கியுள்ளனர். இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் பயின்ற பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களிடையே பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். மறுபுறம் ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவி விட்டதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.