இன்று முதல் தினசரி 22 மணி நேரம் முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் நாள்தோறும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். சுகாதாரத்துறை சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற செயல்களால் மட்டுமே நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என கூறுகிறது. இதனால் அரசு ஊரடங்குகளை அறிவித்து வருகிறது. மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் கடந்த வருடத்தை விட அதிக வீரியத்துடன் மக்களை தாக்கி வருகிறது. இது உருமாறிய வைரஸ் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, பகுதி ஊரடங்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் போன்றவைகளை விதித்துள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் விரைவாக செய்து வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் உயர்வு – வாகன ஓட்டிகள் கவலை!!
பல மாநிலங்களில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது . அதை தொடர்ந்து புதுச்சேரியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையாக அரசு தினசரி 22 மணி நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. இதன் படி இன்று முதல் இந்த 22 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. இதன்படி பகல் 12 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 22 மணி நேர ஊரடங்கு அமலில் இருக்கும் இருக்கும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் அனைத்தும் 2 மணி நேரம் மட்டுமே செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.