மின்துறையில் 2100 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் அறிவிப்பு!
மின்துறையில் காலியாக உள்ள 2100 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விரிவாரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
2100 காலிப்பணியிடங்கள்:
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கென பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றது. அதில் மின்துறை முக்கியமான ஒன்றாகும். தற்போதைய கால கட்டத்தில் மின் இணைப்பு சில மணி நேரம் தடை பட்டாலும் அது மக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. எனவே மின்துறையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தின் மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஹர்பஜன் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் மின் சுமையை குறைக்கும் வகையில் புதிய 66 கிலோ வோல்ட் மின் நிலையங்கள் கட்டப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.
முக்கிய விவரம்.. நவம்பர் 30 தமிழகத்தின் இப்பகுதிகளில் மின்தடை அறிவிப்பு – மின்வாரியம் அறிக்கை!
Exams Daily Mobile App Download
இதனால் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். நாளுக்கு நாள் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் PSPCL இன் செயல்திறனை மேம்படுத்த 2,100 நபர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 8 மாதத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பவர் கார்ப்பரேஷனில் 2,590 பேருக்கு வேலை வழங்கியதை அவர் சுட்டிகாட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக 22,000 பேருக்கு அரசு வேலை வழங்கியதாகவும், 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது மின்துறையில் புதிதாக 2,100 காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.