TNPSC Group 4 VAO தேர்விற்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம் – தேர்வாணையம் தகவல்!
TNPSC குரூப்-4 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு மூலம் 7,306 காலி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில் ஒரு பணியிடத்துக்கு சுமார் 300 பேர் போட்டியிடுகின்றனர் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
21 லட்சம் பேர் விண்ணப்பம்:
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கொரோனா எதிரொலியால் அரசு போட்டித்தேர்வுகள் யாவும் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதார துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்டு வருகிறது. மேலும் அமலில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் திரும்ப பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் TNPSC 7,306 பணியிடங்களுக்கான குரூப்.-4 தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.அதன்படி குரூப்-4 தேர்வானது வருகிற ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இத்தேர்வு காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மூன்று மணி நேரம் நடைபெறும் என்றும் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். குரூப் 4 பதவியில் மொத்தம் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கான 81 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பபதிவு கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி, நேற்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். நேற்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை ஒரே நாளில் 3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சனிக்கிழமை விடுமுறைகள் ரத்து!
இந்த பணிகளுக்கு கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு ஆகும். மேலும் நேற்றிரவு வரையிலான தகவலின்படி மொத்தம் 21,11,357 பேர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்ப பதிவு செய்தவர்களின் புள்ளிவிவரங்களுடன் காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு பணியிடத்திற்கு கிட்டத்தட்ட 300 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர் இணையவழிச் சான்றிதழுக்கு அனுமதிக்கப்படுவர். இதையடுத்து, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.ஒவ்வொரு வகுப்புப் பிரிவுகளிலும் நியமனம் செய்யப்படவுள்ள எண்ணிக்கையை விட 2 மடங்கு விண்ணப்பித்தவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகள் அல்லது 1800-419-0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என TNPSC தெரிவித்துள்ளது.