இந்தியாவில் ஒரே நாளில் 20,408 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!

0
இந்தியாவில் ஒரே நாளில் 20,408 பேருக்கு கொரோனா உறுதி - சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் ஒரே நாளில் 20,408 பேருக்கு கொரோனா உறுதி - சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் ஒரே நாளில் 20,408 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!

உலக நாடுகள் பலவற்றுள் கொரோனாவின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இன்று ஒரே நாளில் 20,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஷாக் அறிக்கை:

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் உலகநாடுகள் சிக்கித் தவித்து வருகிறது. மேலும் கொரோனா பரவலால் நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. ஓரிரு மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து நாடு முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா நான்காவது அலை குறித்த அச்சம் எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இதனால் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதேபோல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டி 2022 – இன்று நடக்கவிருக்கும் போட்டிகள் – முழு பட்டியல் இதோ!

  • கொரோனா தொற்றினால் புதிதாக 20,408 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,00,138 ஆக உயர்ந்தது.
  • கொரோனா தொற்று மூலம் புதிதாக 54 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,312 ஆக உயர்ந்தது.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 20,958 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 43,33,0442 ஆக உயர்ந்துள்ளது.

  • இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.48% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.
  • சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.33% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,43,384பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் 2,03,94,33,480 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 33,87,173 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!