வெளியாகிய குஷியான தகவல்.. தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.2,500? – ரேஷன் அட்டைதாரர்கள் எதிர்பார்ப்பு!
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு அளித்து வரும் நிலையில், வரும் 2023 பொங்கல் பண்டிகைக்கான பரிசு குறித்த மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழக அரசு, தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், இலவச வேஷ்டி, சேலை மற்றும் இதனுடன் வேறு சில பொருட்களையும் வழங்கி வருகிறது. ஆனால் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு அரசு கரும்பு, இலவச வேஷ்டி, சேலையுடன் 21 வகையான மளிகை பொருட்களை வழங்கியது. இவை அனைத்தும் தரமற்றதாக இருந்ததாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
அரசு பள்ளிகளில் இனி இது கட்டாயம்.. மாநில அரசின் அதிரடி முடிவு – பெற்றோர்கள் கடும் கண்டனம்!
Exams Daily Mobile App Download
இதனால் இதற்கு முந்தைய ஆண்டுகளில் வழங்கியது போல், 2023 பொங்கலுக்கும் அரசு 1000 ரூபாய் ரொக்க பரிசு வழங்க முடிவு செய்துள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளியானது. இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 2020 மற்றும் 2021 ம் ஆண்டுகளில் வழங்கியது போல் அரசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 அளிக்குமா? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான அரசின் அறிவிப்பை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.