2023 – 2024ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் – வருமான வரியில் மாற்றம்.. வெளியான முக்கிய தகவல்!
இந்தியாவில் 2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன. 31ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கலில் வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பட்ஜெட் தாக்கல்:
இந்தியாவில் மத்திய அரசு தற்போது 2023 – 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. நடப்பு ஆண்டு வரும் 31ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஏப்ரல் 6ம் தேதி வரை இந்த பட்ஜெட் தாக்கல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பள்ளி மாணவர்களுக்காக போக்குவரத்து கழகம் புதிய நடவடிக்கை.. 20 கூடுதல் பேருந்துகள்!
Follow our Instagram for more Latest Updates
இந்த ஆண்டு தாக்கல் செய்யும் பட்ஜெட் அறிக்கையில் வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது 2023ம் ஆண்டு முதல் வருமான வரி ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அரசு உயர்த்தக்கூடும் என்று ஐஏஎன்எஸ் அறிக்கை தகவல் அளித்துள்ளது.
இந்த புதிய வரி முறையால் சாமானியர்கள் பயனடைவார்கள். அத்துடன் வருமான வரி செலுத்துவோருக்கு ஆயுள் காப்பீட்டில் அளிக்கப்படும் நிர்ணயிக்கப்பட்ட விலக்கின் அளவு அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் 80சி இன் கீழ் கிடைக்கும் முதலீட்டு வரம்புகளும் உயரும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றனர்.