கத்தார் உலக கோப்பை கால்பந்து – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!
32 நாடுகள் பங்கேற்கும் பிபா உலக கோப்பை கால்பந்து விளையாட்டு நடப்பு ஆண்டு கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டை தமிழக ரசிகர்கள் அரசு கேபிள் டிவி வாயிலாக இலவசமாக காண அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அரசு கேபிள் டிவி:
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பிபா கால்பந்து உலக கோப்பை, நடப்பு ஆண்டு கத்தார் நாட்டில் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இந்த விளையாட்டு போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றுள்ளது. இந்த விளையாட்டை பிரம்மாண்டமாக நடத்த கத்தார் நாடு 220 பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் பாதுகாப்புடனும் போட்டி நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
5ம் நாளான இன்று உருகுவே – தென்கொரிய அணிகள் மோதுகின்றனர். அடுத்தாக போர்ச்சுக்கல் – கானா அணிகள் விளையாடவுள்ளனர். இந்த நிலையில் கால்பந்து ரசிகர்களை உற்சாக மூட்டும் வகையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கத்தாரில் நடைபெறும் கால்பந்து விளையாட்டை அரசு கேபிள் டிவியில் இலவசமாக காணலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
SSC Stenographer Grade ‘C’ & ‘D’ விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
இந்தியாவில் உலக கோப்பை கால்பந்து தொடரை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை வியாகாம் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கேபிள் சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் எவ்வித கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம் என்று தெரிவித்துள்ளது.