இளையோர் குத்துச்சண்டை போட்டி – 5 தங்க பதக்கம், 2வது இடத்தில் இந்தியா!!
மான்டென்குரோவில் உள்ள புத்வா நகரில் இளையோருக்கான 30வது அட்ரியாட்டி பியர்ஸ் குத்துசண்டை போட்டி நடைபெற்றது. இந்த தொடரின் முடிவில் இந்தியா மொத்தம் 12 பதக்கங்களை பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளது.
குத்துசண்டை போட்டி:
மான்டென்குரோவில் உள்ள புத்வா நகரில் இளையோருக்கான 30வது அட்ரியாட்டி பியர்ஸ் குத்துசண்டை போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியானது தொடராக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் முடிந்தது. இந்த தொடரில் இந்தியா மொத்தம் 12 பதக்கங்களை பெற்று 2வது இடைத்தை பிடித்துள்ளது. உஸ்பெகிஸ்தான் நாடு முதலிடத்தை கைப்பற்றியது.
சென்னையில் மாபெரும் புத்தக கண்காட்சி 2021 – பிப்ரவரி 24 இல் தொடக்கம்!!
இந்திய அணி:
இந்திய அணியின் சார்பில் மகளிர் பிரிவில் வினிகா (60 கிலோ எடை பிரிவு), சனமச்சா சானு (65 கிலோ எடை பிரிவு), அல்ஃபியா பதான் (+ 81 கிலோ எடை பிரிவு) ஆகியோர்கள் தங்கம் வென்றனர். இவர்களுடன் கிகிதா (48 கிலோ எடை பிரிவு), ராஜ் சாகிபா ( 75 கிலோ எடை பிரிவு) ஆகியோர் வெள்ளி பதக்கமும், நேகா 54 கிலோ எடை பிரிவு), ப்ரீத்தி ( 57 கிலோ எடை பிரிவு) ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
ஆடவர் பிரிவில் பிரியான்ஷூ (49 கிலோ எடை பிரிவு), ஜு குனோ (+91 கிலோ எடை பிரிவு) ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர். மகளிர் பிரிவில் தொடரின் சிறந்த வீராங்கனையாக வினிகா தேர்வு செய்யப்பட்டார். தொடரில் இந்திய அணி மொத்தம் 5 தங்க பதக்கங்களை பெற்றது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்