நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் – விவசாயிகள் போராட்டம் எதிரொலி!
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போரட்டம் இன்றுடன் 120 நாட்களை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
விவசாயிகள் போராட்டம்:
மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு எதிராக அமைந்துள்ளதாகவும், வணிக நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் டெல்லியில் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் போராட்டத்தை நடத்துகின்றனர்.
சிமேட் (CMAT) தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு – என்டிஏ அறிவிப்பு!!
120 நாட்கள்:
விவசாயிகள் மத்திய அரசை எதிர்த்து நடத்தும் போராட்டம் சிறிய அளவில் ஆரம்பித்து நாளடைவில் மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ளது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இந்த போராட்டத்திற்கு பெறும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 120 நாட்களை எட்டியுள்ளது. இதனால் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்தனர்.
முழு அடைப்பு:
சமயுகத்தை கிஷான் மோர்ச்சா சங்க தலைவர் தர்சன் பால் போராட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாடு தழுவிய அளவில் இன்று நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு நடைபெறும். இதனால் பேருந்துகள், சந்தைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து அனைவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றியை தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்