ஜேஇஇ (மெயின்) தேர்வு நாளை தொடக்கம் – கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெளியீடு!!
2021 ம் ஆண்டுக்கான ஜேஇஇ (மெயின்) தேர்வு பிப்ரவரி 23ம் தேதியான நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தேர்வு வாரியம் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஜேஇஇ (மெயின்) தேர்வு:
மத்திய அரசின் உயர்நிலை பல்கலை பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு மத்திய அரசால் நடத்தப்படுவது தான் ஜேஇஇ தேர்வாகும். ஆண்டுதோறும் இதன் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர்கள் மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள். வழக்கமாக ஆண்டிற்கு இரண்டு முறை நடக்கும் இந்த தேர்வானது நடப்பு ஆண்டில் இருந்து நான்கு முறை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆசிரியர் பணி நியமன தேர்வுக்கான வயது வரம்பு நீக்கம் – அரசுக்கு கோரிக்கை!!
முதல் கட்டமாக பிப்ரவரி 23 முதல் 26 வரையிலும், மார்ச் 15 முதல் 18 வரையிலும், ஏப்ரல் 27 முதல் 30 வரையிலும், மே 24 முதல் 28 வரையிலும் என்று நான்கு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இரண்டாவது ஷிப்ட் மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் ஒரு முறையில் இருந்து நான்கு முறை வரை தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வில் மாணவர் எடுத்துள்ள அதிகபட்ச மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.
உடை கட்டுப்பாடுகள்:
என்டிஏ., JEE தேர்வுக்கான உடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தேர்வெழுதும் மாணவர்கள், மிகவும் தடிமனான காலணிகளை அணியக்கூடாது. மேலும், ஆடைகளில் பெரிய அளவிலான பட்டன்கள் இருக்கக் கூடாது.
கோவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகள்:
தேர்வர்களுக்கு இடையில் தகுந்த இடைவெளி விட வேண்டும். வீட்டிலிருந்து கொண்டு வரும் முகக்கவசங்களை அணியக் கூடாது. தேர்வு மையத்தில் கொடுக்கும் முகக்கவசத்தை மட்டுமே அணிய வேண்டும். சானிடைசர்கள் தேர்வு மையங்களில் ஆங்காங்கே வைத்திருக்க வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்