ஜேஇஇ மார்ச் மாத தேர்வுகள் நாளை முதல் தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஜேஇஇ தேர்வுகள்:
தேசிய தேர்வு முகமை 2021ம் ஆண்டுக்கான ஜேஇஇ நுழைவு தேர்வை நடப்பு ஆண்டு முதல் நான்கு கட்டங்களாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடத்த உள்ளது. நடப்பு ஆண்டுக்கான முதல் கட்ட பிப்ரவரி மாத தேர்வுகள் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இரண்டாவது ஷிப்ட் மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் பயணச்சீட்டு வழங்க புதிய தொழில்நுட்பம் – தெற்கு ரயில்வே அறிமுகம்!!
மார்ச் மாத தேர்வுகள்:
இரண்டாம் கட்ட மார்ச் மாத தேர்வுகள் நாளை (16.3.2021) முதல் மார்ச் 18ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 10ம் தேதி முதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வுகள் எழுத்து முறையில் நடக்க உள்ளது. நடப்பு ஆண்டு தேர்வுகளில் எதிர்மதிப்பெண்கள் முறை இல்லை. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு jeemain.nta.nic.in என்ற அதிகார்பூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு வழிகாட்டி:
மாணவர்கள் தேர்வுக்கு பயன்படுத்தும் கணக்கீடு உதவி தாளை தேர்வு மையத்தில் இருக்கும் அட்டை பெட்டியில் போட வேண்டும். தேர்வு மையத்திற்குள் மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், ஆபரண நகைகள் கொண்டு வரவும், அணியவும் அனுமதி இல்லை. மத காரணங்களுக்காக அணியப்படும் உடைகளுக்காக முன்னரே தேர்வு மையத்தில் அனுமதி வாங்க வேண்டும் போன்ற வழிகாட்டுதல்களை மாணவர்கள் தேர்வு நாளில் கடைபிடிக்க வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்