மாநில காவல்துறையில் 20,000 புதிய நியமனம் – துணை முதல்வர் அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் 20,000 பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், முதல்கட்டமாக 8,000 பணியிடங்களுக்கான விளம்பரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருப்பதாகவும் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் அறிவிப்பு:
மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டவும் காவல்துறையின் பங்கு முக்கியமாக உள்ளது. இதனால் காவல் துறையில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் அதிக கவனத்துடன் நிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காவல்துறை காலியிடங்கள் குறித்து துணை முதல்வர் ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிக்கையின் படி, மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் 20,000 பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், அதில் முதல் சுற்றில் 8,000 பணியிடங்களுக்கான விளம்பரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி – வெளியான தகவல்!
Exams Daily Mobile App Download
மீதமுள்ள 12,000 பணியிடங்களுக்கான நியமனம் குறித்து விரைவில் வெளியிடப்படும் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், மாறி வரும் காலம் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இணைய பாதுகாப்பிற்கான வலுவான உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் மாநில அரசு ஆர்வமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்