தமிழகத்தில் 2000+ அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்க உள்ளதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அத்துடன் 2000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முதுகலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆசிரியர் மற்றும் பேராசிரியர்கள் சிலர் வேலையின்றி தவித்தனர். தற்போது கொரோனா நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனை செலுத்தி கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டனர். மேலும் ஊரடங்கு விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு பின்பற்றப்பட்டது. அதனால் தற்போது கொரோனா நோய் கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் நவ.1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வுப்பணியினை விரைந்து முடிக்க அறிவுரை!
அதை தொடர்ந்து தற்போது தமிழக அரசு துறை வாரியாக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களைமேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்களை பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,774 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆன்லைனில் ஆட்டோ புக் செய்பவர்கள் கவனத்திற்கு – இனி 5% GST! மத்திய அரசு ஷாக் அறிவிப்பு!
இந்த காலிப்பணியிடங்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நியமிக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் முதுகலை பட்டதாரிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும் இப்பணியில் நியமிக்கப்படும் முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.10000 மாத சம்பளமாக கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இப்பணியிடங்களை கால தாமதமின்றி விரைவில் நிரப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.