தமிழகத்தில் நாளை முதல் ரூ.2000 & மளிகை பொருட்கள் விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் அறிவித்து உள்ளார்.
ரேஷன் கடை:
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் மக்களின் துயரை நீக்கும் வகையில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதத்தில் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் அதனுடன் ஒரு மாத காலத்திற்கு தேவையான 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
வாட்ஸ் அப் (WhatsApp) Android & iOS பயனர்கள் கவனத்திற்கு – புதிய அம்சங்கள் அறிமுகம்!
இதற்கான டோக்கன் விநியோகம் தமிழகத்தில் கடந்த ஜூன் 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மேலும் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதை அடுத்து டோக்கன் விநியோகம் தமிழகத்தில் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி அவர் கூறியதாவது, நாளை (ஜூன் 15) முதல் இந்த மாதம் இறுதி வரை தமிழக அரிசி அட்டைதாரர்கள் ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த தகவல் மக்களை சற்று நிம்மதி அடைய செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று (ஜூன் 14) காலை முதல் புதிய தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.