தமிழகத்தில் ரூ.2000 & 14 மளிகைப் பொருட்கள் டோக்கன்கள் தயார் – நாளை முதல் விநியோகம்!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணை வழங்கப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது தவணை தொகை ரூ.2000 & 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என தெரிவித்தார். அதற்கான முதல் தவணை மே மாதம் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணை ரூ.2000 இந்த மாதம் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மருத்துவர், செவிலியர்களின் ஒருநாள் உணவுக்கு ரூ.460 செலவு – அமைச்சர் அறிவிப்பு!!
மேலும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய இலவச தொகுப்பும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளை ஓட்டி இந்த திட்டங்கள் அனைத்தும் தொடங்கி வைக்கப்பட்டது. இவை அனைத்தும் ரேஷன் கடைகளில் ஜூன் 15அம் தேதி முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வழங்கப்பட உள்ளது. அதற்கான டோக்கன் ஜூன் 11 முதல் 14 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எவ்வித விடுதலுமின்றி இரண்டாம் தவணை தொகை 2000 ரூபாயும், மளிகை பொருள் தொகுப்பும் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நாட்களில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டோக்கன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த டோக்கன்களில் தமிழ்நாடு அரசு என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், ஆளும் கட்சி சார்ந்த படங்களும், குறியீடுகளும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்காக பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.