2,000 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி – மத்திய அரசு திட்டம்!!
மத்திய அரசின் திட்டம்:
நாடு முழுவதும் உள்ள இளம் வயதினருக்கு மத்திய அரசு ‘தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல் யோஜனா’ என்ற திட்டத்தின் அடிப்படையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறது. டெய்லரிங், சி.என்.சி ஆபரேட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், சோழர் பேனல் அமைத்தல், பழுதுபார்த்தல், சேமிப்பு கிடங்கு மேற்பார்வை, பொது பணிக்கான உதவியாளர் போன்ற பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயனடைவார்கள்.
GET தேர்வில் வெளிமாநிலத்தவர் அதிகளவில் தேர்ச்சி – என்எல்சி நிறுவனம் விளக்கம்!!
கோவை மாவட்டம்:
இந்த திட்டத்தை மத்திய அரசு நடப்பு ஆண்டில் கோவை மாவட்டத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக கோவை மாவட்டம் முழுக்க 2,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ஒன்பது நிறுவனங்களும், ஒன்பது மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளில் இருந்தும் தகுதியான நபர்கள் தேர்வு செய்து பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Ramanathapuram district la ethumae nadakatha.