கொரோனாவால் உயிரிழந்த 2,000 அரசு ஊழியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்!
உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா காலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரணம்:
கொரோனா முதல் அலை தொடர்ந்து இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவியது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பின்னும் பஞ்சாயத்து தேர்தலை நடத்தி கடும் சர்ச்சைக்குள்ளானார் யோகி ஆதித்யநாத். இவ்வாறு நடத்தப்பட்ட பஞ்சாயத்து தேர்தலில் 2,000க்கு மேற்பட்ட ஊழியர்கள் கொரோனாவால் பலியாகியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கொரோனாவால் இழந்த ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
செப்.24 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மும்பை மாநகராட்சி அறிவிப்பு!
அதன் அடிப்படையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 30 லட்சம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன் காரணமாக ரூ.605 கோடி தொகையை தேர்தல் ஆணையத்திடம் ஆகஸ்ட் 26ம் தேதி யோகி ஆதித்யநாத் அரசு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பெற்றுக்கொண்ட தொகைகளை அரசு ஊழியர்கள் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் மாவட்ட நீதிபதிகள் வழங்குவார்கள் என கோரப்பட்டுள்ளது. இந்த இழப்பீடு தொகையானது இறந்தவர்களின் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – குவியும் மக்கள் கூட்டம்!
தற்போது கொரோனாவுக்கு பலியான சுமார் 2,128 மாநில அரசு ஊழியர்கள் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்களில் கொரோனா தொற்றால் 2097 பெரும் மீதமுள்ளவர்கள் வேறு நோயினால் இறந்ததாகவும் தரவுகள் கூறியது. இருப்பினும் 2,128 பேரின் குடும்பங்களுக்கும் கருணை அடிப்படையில் நிவாரணம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அரசு வழங்கும் இந்த நிவாரணத்தினை பெற தேர்தல் பணிகளுக்கான பயிற்சி, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகிய 30 நாட்களுக்குள் கொரோனா வந்து இறந்த ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.