சென்னை டூ திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – 200 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடை விடுமுறையின் காரணமாக அதிகமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருப்பதி செல்ல கூடுதலாக 200 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம்:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் உள்ள எந்த வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம் அஷ்டதள பாத பத்ம ஆராதனை, கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.
சென்னை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – இனி தலைக்கவசம் கட்டாயம்!
தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆந்திராவில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் வந்து பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கோடை விடுமுறையை ஒட்டி பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் வசதிகளை செய்து தர தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு 30% பக்தர்கள் அதிகமாக திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
வார இறுதி நாட்களில் அதிகமான பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் அப்பொழுது மட்டும் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய கிழமைகளில் தினசரி கூடுதலாக 50 பேருந்தும் என மொத்தமாக 200 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் பேருந்துகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.