அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்க ஏற்றுமதி வரி 20% உயர்வு? மத்திய அரசு முடிவு!
இந்தியாவில் இந்த ஆண்டு நெல் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு 20 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் அரிசியின் விலை சர்வதேச அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரிசி தட்டுப்பாடு:
உலக அளவில் அதிகமான நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவிலிருந்து 150 நாடுகளுக்கு நெல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இந்தியாவில் நெல் சாகுபடியின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. நெல் சாகுபடியின் அளவு குறைந்துள்ளதால் அரிசியின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்தியாவில் அரிசி சாகுபடி குறைந்ததன் காரணமாக உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவியுள்ளது.
இந்நிலையில் உள்நாட்டில் நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டினால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் குருணை அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளவைகளுக்கு மட்டும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரைக்கும் நெல் ஏற்றுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணம் குறித்த உத்தரவு – நீதிமன்றம் கருத்து!
Exams Daily Mobile App Download
மேலும், உள்நாட்டில் நிலவி வரும் அரசி தட்டுப்பாட்டை ஓரளவிற்கு சமாளிப்பதற்காக பாசுமதி அரிசியை தவிர பிற அரிசிக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வரியை 20% ஆக உயர்த்தி உள்ளதாகவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும், அரிசி ஏற்றுமதிக்கான வரிவிதிப்பு 20 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ள நிலையில் சர்வதேச அளவில் அரிசியின் விலை உயரும் என கணிக்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் நெல் சாகுபடி குறைந்து விட்டதால் வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் இருந்து பிற நாடுகள் அரிசியை ஏற்றுமதி செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்