அனைத்து வகையான மதுபானங்களும் 20% விலை உயர்வு – இன்று முதல் அமல்!
புதுச்சேரியில் கலால் துறை சார்பில் இயங்கி வரும் அனைத்து மதுபான கடைகளிலும் மதுபானக்களின் விலையை உயர்த்த புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
மதுபான கடைகள்:
புதுச்சேரி அரசின் கலால் துறை சார்பில், 450க்கு மேற்பட்ட மதுபான கடைகள், 96 சாராயக் கடைகள், 75 கள்ளுக்கடைகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த கடைகளில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனை செய்யப்படுகின்றனர். புதுச்சேரி அரசு கலால் துறை 2017ஆம் ஆண்டு முன்னதாக மதுக்களின் விலை ஏற்றம் செய்தது. அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விலையேற்றம் செய்தது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – அமைச்சர் விளக்கம்!
அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக விலை ஏற்றம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வழக்கமாக புதுச்சேரியில் மது விலை குறைவாக இருக்கும் ஆனால் இந்த விலையேற்றத்திற்கு பின்னர் மது விலை தமிழகத்திற்கு இணையாக உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா வரி நீக்கப்பட்டு விலை குறைவாக இருந்தது.
தற்போது புதுச்சேரி அரசு கலால் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் இந்திய தயாரிப்பு மதுக்கள் மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுகளின் விலைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 20 சதவிகிதம் விலை உயர்த்தி இன்று முதல் அமல்ப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக 2018 ஆம் ஆண்டு மது உயர்த்தப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர் உயர்த்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
சுற்றுலா தலமான புதுச்சேரியில் முக்கிய வருமானவே மது விற்பனை தான், வருவாய்க்கு ஏற்றார் போல மது விற்பனை உயர்த்தப்படும். ஆனால் அண்டை மாநிலங்களுக்கு இணையாக மது விலை உயர்த்தப்படுவது காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் என வர்த்தகர்கள் கவலை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.