Post Office இல் 150 ரூபாய் முதலீட்டில் 20 லட்சம் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் உள்ள வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை குறித்து விரிவாக பார்க்கலாம்.
வருங்கால வைப்பு நிதி திட்டம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீடாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் செலுத்தத் தொடங்கினர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் இந்த சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. அத்துடன் இதில் சேமிக்கப்படும் பணம் பாதுகாப்பாகவும் கணிசமான வருவாய் கொடுக்கும் ஒரு திட்டமாகவும் உள்ளது. அதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் முதல் பெரிய பணக்காரர்கள் வரை இந்த சேமிப்பு திட்டத்தில் இணைகின்றனர்.
தமிழக 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு? அரசின் எடுக்கும் முடிவு!
தற்போது அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். இதில் ஒரு ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அத்துடன் இதில் பெறப்படும் முதலீட்டு தொகைக்கும் வட்டி தொகைக்கும் வரி விலக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். தேவைப்பட்டால் மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 2 வருடங்களாக இலவச லேப்-டாப்கள் வழங்காதது ஏன்? அரசு தரப்பு விளக்கம்!
அதனால் அதிகமான அளவு வட்டி தொகையை பெற முடியும். இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 25 வயதுடைய நபர் மாதந்தோறும் ரூ.4500 முதலீடாக செலுத்தினால் ஆண்டுதோறும் ரூ.54000 தொகையை செலுத்த வேண்டும். அதன்படி 20 ஆண்டுகள் முடிவில் அவர் 10.80 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். அதன்பின் வட்டி தொகை கணக்கிடப்பட்டு முதிர்வு காலத்தின் முடிவில் 20 லட்ச ரூபாய் சேமிப்பு தொகையாக கிடைக்கிறது. அத்துடன் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் முடியும் முன் சேமிப்புதாரர் இறந்து விட்டால் அவரது மனைவி அல்லது வாரிசுகள் இந்த தொகையை க்ளைம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.