Post Office இல் தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சிறு சேமிப்பு திட்டம் உள்ளது. இதில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம், முதிர்வு தொகை உள்ளிட்ட பல்வேறு பலன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி
இந்திய அஞ்சல் துறையில் ஏராளமான சிறு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் பெரும்பாலானவர்கள் இணைகின்றனர். ஏனெனில் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் வங்கிகளை காட்டிலும் அதிகமான வட்டி தொகையை பெற முடிகிறது. அத்துடன் இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் முதலீடு செய்ய முடியும் என்பதால் சாதாரண மக்கள் கூட பெருமளவு இணைகின்றனர். மேலும் இதில் கிடைக்கும் சேமிப்பு தொகையானது கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கவனத்திற்கு – பிப்.25ல் பேச்சுப்போட்டி அறிவிப்பு!
மேலும் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வரை பெற முடிகிறது. அத்துடன் இதில் பெறப்படும் வட்டி தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். தங்கள் தேவைக்கேற்ப இதில் மேலும் முதிர்வு காலத்தை நீட்டித்து கொள்ளவும் முடியும். இதில் மேலும் 5 ஆண்டுகளுக்கு 2 முறை நீட்டித்துக் கொள்ளலாம்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் – கல்வித்துறையில் தொடரும் குழப்பங்கள்!
அதன்படி இந்த திட்டத்தில் தினமும் ரூ.150 முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.4500யை செலுத்த வேண்டும். அத்துடன் ஒரு வருடத்திற்கு ரூ.54,000 செலுத்த வேண்டும். இவ்வாறு 20 ஆண்டுகளுக்கு செலுத்தினால் ரூ.10.80 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த தொகையானது முதிர்வு காலம் முடியும் பொது வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு அதனுடன் வழங்கப்படுகிறது. அதாவது 20 ஆண்டுகள் முடிவில் ரூ.20 லட்ச ரூபாய் வரை பெற முடியும். இந்த திட்டத்தில் மிகப்பெரிய தொகையை குறுகிய காலத்திற்குள் சேமிக்க முடிவதால் முதலீட்டாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.