தீபாவளியை முன்னிட்டு 20 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில கல்வித்துறை உத்தரவு!
கொரோனா பாதிப்புகள் குறைந்து சமீபத்தில் தான் பள்ளிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி விடுமுறை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சில மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு மாநிலம் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. ஆனால் அகமது நகர் போன்ற மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வந்தது. அங்கு மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 200 முதல் 400 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்பு அதிகாரிகள் 21 மாவட்டங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதிகளில் மைக்ரோ கன்டெய்ன்ட் மண்டலங்களை உருவாக்கி அக்டோபர் 23 வரை ஊரடங்கை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
இது தவிர பாதிப்புகள் கட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் கடந்த 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள 21 கிராமங்களில் மருத்துவ கடைகள், கிளினிக்குகள் மற்றும் நோய் பரிசோதனை ஆய்வகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் செயல்படலாம். இந்த கிராமங்களில் வெளியாட்களின் நுழைவு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுவோர் கவனத்திற்கு – சிமெண்ட் விலை ரூ.120 அதிகரிப்பு!
சமீபத்தில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 20 நாட்கள் விடுமுறை பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றுடன் சேர்த்து மொத்தம் 22 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்க விரும்பும் பள்ளிகள் விடுமுறையை குறைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் கல்வி அதிகாரியின் அனுமதியுடன் ராஜமாதா ஜிஜவு ஜெயந்திக்கு தனது அதிகாரத்தில் விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.