தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக இரண்டு வாரம் கோடை விடுமுறை – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் மே 13 முதல் ஜூன் 12 வரைக்கும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அரசு பள்ளிகளில் சில வேலைப்பாடுகள் நடைபெற்று கொண்டிருப்பதால் பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
கோடை விடுமுறை:
கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டது. இந்த கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க மே 25 கடைசி நாள்!
மேலும் குறைந்த நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் மாணவர்களின் நலன் கருதி 35% வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதியும் பொதுத்தேர்வுகள் துவங்கப்பட்டன. மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதிக்குள் தேர்வுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை. இருப்பினும் மே 13 ஆம் தேதி வரைக்கும் இந்த மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 13 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் 13 ஆம் தேதி அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள 10,300 க்கும் அதிகமாக உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால் பள்ளி திறக்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 20 அல்லது ஜூன் 27 ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.