சென்னையில் தொடரும் கனமழை, 2 சுரங்கப் பாதைகள் மூடல் – போக்குவரத்திற்கு தடை விதிப்பு!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் 2 சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை மூடல்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இடைவிடாது தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த வாரத்திற்கு முன்பு தான் தொடர்கனமழை காரணமாக வெள்ளைப்பெருக்கு நிலவியது. அதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மீண்டும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டது.
தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! டிச.4 கடைசி நாள்!
அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக மீண்டும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அவ்வாறு பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதாவது தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை மற்றும் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
டிசம்பரில் திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தரிசன டிக்கெட் விநியோகம் துவக்கம்!
அதேபோல் கேகே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் இரண்டாவது அவென்யூ நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது. மேலும் தியாகராயநகர் வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து கேகே. நகர் அண்ணா பிரதான சாலையில் மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணி நடைபெறுவதால் அங்கும் சில போக்குவத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.