SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான 2 திட்டங்கள் அறிமுகம் – மிஸ் பண்ணாம படிங்க!
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு வாகன மற்றும் வீட்டுக்கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
எஸ்பிஐ:
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்களையும், அதில் சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. கடந்த மே மாதங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி சேவையை அளித்து வந்தது. எஸ்பிஐயின் அதிகாரபூர்வ இனைய பக்கம் மூலம் பண பரிமாற்றம் நடைபெற்றது. கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு வங்கி கொரோனா சிகிச்சைக்கான கடன் தொகையை குறைந்த வட்டியில் வழங்கியது.
SMS மூலமாக ஆதார் சேவைகளை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! UIDAI அறிவிப்பு!
அதனை தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்களுக்கு அதிகம் தேவைப்படும் வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களை அளிக்க முன்வந்துள்ளது. இந்த 2 வகையான கடன்களை பெறுவது என்பது தற்போது எளிதான ஒன்றாகிவிட்டது. எஸ்பிஐயின் யோஜனா ஆப் மூலம் வீட்டிலிருந்து கடன் பெற முடியும். எஸ்பிஐ வங்கியில் ஏற்கனவே வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கூடுதல் சலுகையாக ரியாலிட்டி கோல்டுக்கு லோன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு பண பற்றாக்குறை இருந்தால் இந்த திட்டத்தின் மூலம் தங்க நகைகளை வைத்து ரூ.50,000 முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம்.
தமிழகத்தில் நாளை (நவ.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ரியாலிட்டி கோல்டு திட்டத்தில் பெறும் கடன் தொகையை மாதாந்திர தொகையாக 36 மாதங்களில் செலுத்தி முடிக்க வேண்டும். அடுத்ததாக வாகன கடன் அனைவரும் அதிகம் தேவைப்படும் கடனாக உள்ளது. ஆண்டுக்கு 10.50% வட்டியில் 20,000 முதல் 3 லட்சம் வரை வாகனக்கடன் பெறலாம். இந்த கடனை 48 மாதங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும். மேற்கண்ட திட்டங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2 கடன் திட்டங்கள் குறித்து கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐயின் இணையதளத்தை பார்க்கலாம்.