தமிழகத்தில் 2 புதிய ஆக்சிஜன் தொழிற்சாலைகள் – அரசு சலுகைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் 2 புதிய ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு 2 நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆக்ஜிசன் உற்பத்தி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தினசரி பாதிப்பு 35 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்தது. கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோய் உடலில் நம் நுரையீரலை பாதிப்படையச் செய்கிறது. இதனால் கொரோனா நோயாளிகள் மூச்சு விடுவதற்கு சிரமப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு செயற்கை ஆக்சிஜன் தேவைப்பட்டது. அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் அனைவருக்கும் தேவையான ஆக்சிஜன் கையிருப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்!
ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டது. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவும் கோரிக்கைகள் எழுந்தது. பிறகு அரசின் சீரிய முயற்சியால் மருத்துவ உயிர்காக்கும் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு அவர்களின் உயிர் காக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் மற்றும் சிவிஐ டிரேட் ஆகிய நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
2 நிறுவனங்களுக்கும் தினசரி குறைந்தபட்சம் 10 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை குறைந்தபட்சம் தலா 50 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 30 சதவீதம் மூலதன மானியமாக வழங்கப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் சிப்காட் மூலம் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் இந்த நிறுவனங்களுக்கு முத்திரை வரியில் 50% சலுகை வழங்குவதோடு, மின்சாரத்திற்கு 5 ஆண்டுகள் வரி விலக்கு அளித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.