மார்ச் மாத சம்பளத்துடன் DA 34% உயர்வு & 2 மாத நிலுவைத்தொகை – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1, 2022 க்கான அகவிலைப்படி உயர்வு வரும் மார்ச் மாதம் வழங்கப்பட உள்ளதாகவும், அதனுடன் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான நிலுவை தொகையும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது மொத்த அகவிலைப்படி (DA) 31 சதவீதமாக உள்ளது. ஜனவரி 1, 2022 தவணைக்கான அகவிலைப்படி 34 % ஆக, அதாவது 3 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளது. இது ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைப்படுத்தப்படும். அதாவது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான அலவன்ஸ் மற்றும் மார்ச் மாத சம்பளத்தில் நிலுவைத் தொகையுடன் பணியாளர்களுக்கு கிடைக்கும். மார்ச் மாதத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும் என்றும், அதில் டிஏ நிலுவைத் தொகையும் அடங்கும் என்றும் செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – அணியின் பலம் மற்றும் பலவீனங்கள்!
ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18000 எனில், 34 சதவீதம் என்ற விகிதத்தில் ஒரு மாதத்திற்கு DA ரூ.6120 கிடைக்கும். இரண்டு மாதங்களுக்கு நிலுவைத் தொகையாக ரூ. 12,240 மார்ச் மாத சம்பளத்தில் கூடுதல் டிஏ பாக்கி கிடைக்கும். இதேபோல், 56900 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறுபவர் 34 சதவீதம் அகவிலைப்படிக்கு மாதம் ரூ. 19346 பெறுவார். இதனால் இரண்டு மாத நிலுவைத் தொகை சுமார் ரூ.38,692 ஆக இருக்கும். 7வது மத்திய ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களின் டிஏ அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. டிசம்பர் 2021க்குள் CPIIW எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் மூன்று சதவீதம் செய்திகள் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்த்தப்பட்டால், அவர்களின் அடிப்படை சம்பளம் இரண்டு மடங்கு அதிகரிக்கும். இதன் மூலம் 1.08 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தவணைக்கான DA உயர்வு தீபாவளி பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நடப்பு தவணைக்கான DA உயர்வு பற்றிய அறிவிப்பு ஹோலி பண்டிகையை ஒட்டி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.