TN TRB பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 2 மாதம் சம்பளம்? வலுக்கும் கோரிக்கை!

0
TN TRB பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 2 மாதம் சம்பளம்? வலுக்கும் கோரிக்கை!
TN TRB பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 2 மாதம் சம்பளம்? வலுக்கும் கோரிக்கை!
TN TRB பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 2 மாதம் சம்பளம்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் சுமார் 3500 ஆசிரியர்கள் பணி நிரவல் என்ற முறையில் ஆசிரியர்களை அரசு டிரான்ஸ்பர் செய்துள்ளது. இந்த பணி நிரவல் செய்யப்பட்ட அரசு ஆசிரியர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படமால் உள்ளது. அதனால் தங்களுக்கு 2 மாத சம்பளத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சார்பாக விஜயபாலன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆசிரியர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. மேலும் மத்திய அரசு அறிவித்தபடி ஆரம்ப பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் அடிப்படையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள உபரி ஆசிரியர்களை கண்டறிந்து ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் நியமிக்க பணி நிரவல் என்ற பெயரில் ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் EL விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!

அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு சுமார் 3500 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த ஆசிரியர்களுக்கு கடந்த மார்ச் 14ம் தேதி கவுன்சிலிங் நடைபெற்றது. இதையடுத்து இவர்கள் மார்ச் 15ம் தேதி அன்று பணி நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனம் செய்யப்பட்டு 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் இவர்களுக்கான மாத சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அதனால் பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்களின் சம்பளம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சங்கத்தினர் தங்களுக்கு உடனடியாக 2 மாதத்தை வழங்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்டத் தலைவர் விஜயபாலனிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே 148 ஆசிரியர்கள் பணி நிரவல் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு உடனடியாக 2 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று விஜயபாலன் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!