தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 மாதம் சம்பள நிறுத்தம் – முதல்வரிடம் முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 3500 ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர். இவர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர்.
பணி நிரவல்:
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் படிப்படியாக அதிகரித்தது. இந்த நேரத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை என்ற பற்றாக்குறை நிலவியது. இதனால் கற்றல் கற்பித்தலில் தொய்வு ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறினர். இந்த நிலையில் உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்பவும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவும் கோரிக்கைகள் எழுந்தது. அதனால் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வை அறிவித்தது.
இந்திய தபால் துறையில் எழுத்துத் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – 38,926 காலிப்பணியிடங்கள்!
இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. நடப்பாண்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்தபட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அப்போது சுமார் 3500 ஆசிரியர்களை அரசு பணி நிரவல் செய்தது. இவர்களுக்கு 2 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் வந்துள்ளது.
அதாவது பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பிறகு பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்படவில்லை விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே 148 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது. எனவே உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இதற்கு முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.