மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் பலன்கள் – 18 மாத DA நிலுவைத்தொகை ஒரே தவணையில்?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் பலன்கள் - 18 மாத DA நிலுவைத்தொகை ஒரே தவணையில்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் பலன்கள் - 18 மாத DA நிலுவைத்தொகை ஒரே தவணையில்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் பலன்கள் – 18 மாத DA நிலுவைத்தொகை ஒரே தவணையில்?

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய அப்டேட்களின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவை தொகை ஒரே செட்டில்மென்டில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

நிலுவை தொகை:

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி லுவைத் தொகை குறித்த அறிவிப்பு மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது. புதிய அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்கள் ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையைப் பெறுவார்கள் என்று நம்புகின்றனர். ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால டிஏ நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான விவகாரம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று நிதி அமைச்சகம் இணையத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு – மாநில அரசின் உத்தரவு!

ஜேசிஎம் தேசிய கவுன்சிலின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா அவர்கள், கவுன்சில் தனது கோரிக்கையை அரசாங்கத்தின் முன் வைத்துள்ளதாகவும், ஆனால் இரு தரப்பும் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை என்றும் கூறினார். மேலும், அமைச்சரவை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அது இன்னும் முடிவாகவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

Exams Daily Mobile App Download

மிஸ்ராவின் அறிக்கையின் படி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதி அமைச்சகம், செலவினத் துறை அதிகாரிகளுடன் JCM கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது 18 மாத DA நிலுவைத் தொகையும் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அக்டோபர் 2021 முதல் 17% இல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் நிலுவைத் தொகை இன்னும் டெபாசிட் செய்யப்படவில்லை. செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!