இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – பன்னாட்டு நிறுவனங்கள் தயார்!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் வேலைவாய்ப்பு அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்க தயாராக உள்ளது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பால் வேலையிழந்து பலரும் தங்களது புதிய பணியை தேடி அலைந்து வருகின்றனர். இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன் வந்துள்ளனர். அந்த வகையில் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. அரசை தொடர்ந்து தனியார் துறைகளும் அவ்வப்போது முகாம்களை நடத்தி வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த முகாம்கள் மூலம் படித்த ஏராளமான இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது அமெக்ஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ, சிட்டி, பார்க்லேஸ், மோர்கன் ஸ்டான்லி, ஹெச்எஸ்பிசி, ஸ்டானடர்ட் சாராட்டட், கோல்டுமேன் சாஸ், அமேசான், டார்கெட், வால்மார்ட், ஷெல், ஜிஎஸ்கே, அபாட், ஃபைசர், ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன், நோவார்ட்டிஸ், அஸ்ட்ராஜென்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் புதிய நபர்களை வேலைக்கு சேர்க்க தயாராகி வருகின்றன.
Axis வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டு, கார் கடன்களுக்கான EMI உயர்வு!
கொரோனா பரவல் இறங்கு முகத்தில் சென்று வருவதை அடுத்து உலகம் டிஜிட்டல் மயத்தில் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டது. இதனால் தொழில்நுட்பம், டிஜிட்டல் பிரிவில் ஏராளமானோருக்கு வேலை காத்திருக்கிறது. சொலூஷன், கோர் டெவலப்மென்ட், கிளவுட், சைபர் செக்யூரிட்டி, விர்சுவலைசேஷன், டேட்டா அனாலிட்டிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் அதிகமாக காலிப்பணியிடங்கள் உள்ளதாக எக்ஸ்பினோ மனிதவள நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, வதோதரா, புனே ஆகிய நகரங்களில் இரு்து மட்டும் 5,000 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.