மீண்டும் வேகமெடுக்கும் ஐடி துறை.. 2 லட்சம் பேருக்கு வேலை – Infosys நிறுவனம் ஹாப்பி நியூஸ்!
சமீப காலமாக தொழில்நுட்ப துறையில் அடுத்தடுத்து பலவிதமான பிரச்சனைகள் எழுந்து, துறையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மீண்டும் ஐடி துறை தனது மேம்பட்ட நிலையை அடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐடி துறை :
உலகம் முழுவதிலும் உள்ள ஐடி துறை நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக மிகவும் சரிவை சந்தித்து வருகின்றது. தேவை குறைவு மற்றும் வருவாய் குறைவு போன்ற காரணங்களால் பொருளாதார சிக்கல்களை ஐடி நிறுவனங்கள் சந்தித்து வருகிறது. இதனால், ஐடி துறை நிறுவனங்கள் அனைத்தும் பணியாளர் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பல முன்னணி நிறுவனங்களிலும் ஊழியர்களின் நீக்கம் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் எண்ணிக்கையில் நடந்து வருகிறது.
இந்தியாவில் நவம்பர் 19 ஸ்தம்பிக்கும் வங்கி பணிகள்.. ஸ்ட்ரைக் அறிவிப்பு – UFBU இந்தியா அமைப்பு ஆதரவு!
Exams Daily Mobile App Download
மேலும், மூன்லைட்டிங், WFH ரத்து மற்றும் அட்ரிஷன் விகிதம் குறைவு போன்றவற்றால் கடுமையாக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐடி துறை கவலைக்கு இடமான நிலையை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஐடி துறை தற்போது சந்தித்து வரும் இன்னல்கள் மாறும் என்றும், ஏற்றத்தாழ்வுகள் என்பது சாதாரணமானது, இனி வரும் நாட்களில் ஐடி நிறுவனங்களில் 2 லட்சம் பேர் பணியமர்த்தப்பட உள்ளார்கள் என்றும், ஐடி துரையின் மீதான முதலீடுகள் அதிக வளர்ச்சியை காணும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.