கொரோனாவால் ரூ.2 லட்சம் கோடி பொருளாதார இழப்பு – ரிசர்வ் வங்கி அறிக்கை!
நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் பொருளாதார வல்லுநர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி:
நாடு முழுவதும் கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கடந்த 2020ம் ஆண்டில் ஏற்பட்ட உயிர் சேதத்தை விட தற்போது ஏற்படும் உயிர் சேதம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமலில் உள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான சரிவை கண்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு – ஜூலை மாதம் வழங்கல்!!
காரணம் பொது முடக்கம் காரணமாக பல தொழில்கள் முறையாக இயங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து ரிசர்வ் வங்கி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டில் பரவும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. இதனை இந்த மாதத்திற்கான பொருளாதார அறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா இரண்டாம் அலையில் உள்நாட்டில் பொருட்களின் தேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது வேளாண் துறைகள் முறையாக செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டாலும் கொரோனா முதல் அலையை ஒப்பிடுகையில் தற்போது தொழில்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரம் பொறுத்தே பொருளாதாரம் சீரடைவு ஏற்படும் என்றும் கூறியுள்ளது.