தமிழக கல்லூரி மாணவர்களுக்கு 2 GB இலவச டேட்டா திட்டம் – அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டாவை கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இலவச டேட்டா:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழ்மை காரணமாக ரீஜார்ஜ் செய்து டேட்டா பெற இயலாத நிலையில் பலர் உள்ளனர். ஊரடங்கு காலத்தில் கல்வி, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாகியது. மேலும் ஸ்மார்ட் போன்கள் இருந்தாலும் டேட்டா இல்லாத காரணத்தால் ஆன்லைன் வகுப்புகளை தொடர முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.
கோவை பள்ளிகளில் ஜூன் 28 முதல் மாணவர் சேர்க்கை? கல்வித்துறை திட்டம்!
கடந்த கல்வியாண்டில் கல்லூரி மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி இலவச டேட்டாவை அரசு சார்பில் வழங்கியது. அது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதன் மூலம் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் தடையின்றி பங்கேற்றனர். பாடம் சம்மந்தமாக அதிக தகவல்களை இலவச டேட்டாக்களை பயன்படுத்தி சேகரித்து கல்வி பயின்றனர்.
TN Job “FB Group” Join Now
தற்போதும் வகுப்புகள் இணைய வழியிலே நடந்தாக வேண்டிய சூழ்நிலை இருப்பதால், மீண்டும் தினசரி 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.