இந்தியாவில் 89% பேருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி – மத்திய மந்திரி தகவல்!

0
இந்தியாவில் 89% பேருக்கு 2 'டோஸ்' தடுப்பூசி - மத்திய மந்திரி தகவல்!
இந்தியாவில் 89% பேருக்கு 2 'டோஸ்' தடுப்பூசி - மத்திய மந்திரி தகவல்!
இந்தியாவில் 89% பேருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி – மத்திய மந்திரி தகவல்!

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா கையில் எடுத்து, அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு குறைவான காலத்தில் தடுப்பூசி போட்டு அசத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக 18 வயதானோரில் 89 சதவீதத்தினருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி தகவல்:

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. கொரோனா மூன்றாம் அலைக்கு பின், இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுக்குள் வந்தது. கொரோனாவுக்கு எதிராக வேக்சின் கண்டறியப்பட்டு நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது, இதன் பலனாக தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்படும் உயிரிழப்புகளும் வெகுவாக கட்டுக்குள் வந்துவிட்டது. இருப்பினும் இந்நிலையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே மீண்டும் மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.

Exams Daily Mobile App Download

ஓமிக்ரான் BA5 வகை கொரோனா வைரஸ் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என தகவல்கள் கூறுகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டு வர பேராயுதமாக தடுப்பூசி திகழ்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவது தொடங்கியது. பின்னர் அது பல கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. மேலும் கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் 12-14 வயது சிறுவர், சிறுமியருக்கும் தடுப்பூசி போடுவது தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி முதல் 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்படுகிறது.

தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – டிசம்பர் மாத தேர்வு முடிவுகள் வெளியீடு!

இந்நிலையில் நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட 89 சதவீத மக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும், 195.67 கோடி, ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்ட 89 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மேலும் 12 – 14 வயதினரில் 75 சதவீத பேர் முதல் டோசும், 18 – 59 வயதினரில் 36.61 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை டோசும், 15 – 18 வயதுடையோரில் 5.99 கோடி பேர் முதல் டோசும் செலுத்தி உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!