தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவருக்கு மட்டுமே அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!
தற்போது கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலை பரவல் தொடங்க உள்ளது. அதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் கொரோனா நோயின் இரண்டு டோஸ் தடுப்பூசியை கட்டயாமாக செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
வெளிநாட்டினர் கவனத்திற்கு
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு இழப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றன. ஆனால் அண்மைக் காலமாக கொரோனா நோய் தொற்றின் பரவல் குறைந்துள்ளது. இதன் முக்கிய காரணம் முழு ஊரடங்கு விதி முறைகளும், தடுப்பூசி செலுத்தி கொண்டதும் ஆகும். ஆனால் இன்னும் பலர் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் நோய் தொற்று பரவல் ஏற்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நவ. 28ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!
இதனை கருத்தில் கொண்டு தமிழக பொதுசுகாதார துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டினர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதி என்று அறிவித்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்தி இருந்தால், 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதே போல் தடுப்பூசி செலுத்தாதவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 – முதல்வரின் திட்டம் என்ன?
அத்துடன் அந்த பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று சோதனை முடிவுகள் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு பொது சுகாதார துறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் லண்டன் , தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, மொரீசியஸ், ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கும் இந்த நடைமுறை தான் பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது. அப்போது தான் தமிழகத்தை கொரோனா நோய் பரவலில் இருந்து காப்பாற்ற முடியும்.