இனி பொறியியல் மாணவர்களுக்கும் 2 பட்டங்கள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!
தமிழகத்தில் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் இனி ஒரே நேரத்தில் இரண்டு பாடப்பிரிவுகளை படிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொறியியல் மாணவர்கள்
தமிழகத்தில் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் ஒரு வெவ்வேறு பாடங்களை எடுத்து படிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை நடப்பு கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படிப்புகளை இரண்டு வெவ்வேறு பல்கலைக்கழகத்தில் இணைந்து கற்கலாம் என்றும் கூறப்பட்டது. அதுபோல ஒரு பட்டப்படிப்பை கல்லூரியிலும் மற்றொரு பட்டப்படிப்பை ஆன்லைன் மூலமாகவும் பயிலலாம்.
Jio, Airtel, Vodafone பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ரூ.500க்கும் கீழான ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
இதே போல் இரண்டு பட்டப்படிப்பையும் இரண்டையும் நேரடி வகுப்புகளாக பயிலலாம் அல்லது வெவ்வேறு கல்லூரி நேரங்களில் சேர்ந்து இரு பட்டபடிப்பையும் படிக்கலாம் என்று யுஜிசி அறிவுறுத்தியிருந்தது. ஆனால் இந்த அறிவிப்பு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் இரு பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்கலாம் என்று யுஜிசி அறிவித்தாலும் இதற்கான முடிவுகளை அந்தந்த பல்கலைக்கழகங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் யுஜிசியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இனி பொறியியல் மாணவர்கள் 2 பட்டங்களை பெற முடியும் என்ற புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 பாடங்களை கூடுதலாக படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு மைனர் டிகிரி என்ற பெயரில் 2வது பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனை 5வது செமஸ்டர் முதல் 8வது செமஸ்டர் வரை பிரதான பாடத்துடன் படிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்