2 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு!

0
2 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல் - மாநில அரசு!
2 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல் - மாநில அரசு!
2 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு!

கேரளா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா நோய் பரவல் அதிகரித்து உள்ளதால் அங்கு இரெண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவல் 6 சதவீதத்திற்கு கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா நோய் தொற்று பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றது. இதனால் அனைத்து மாநிலங்களுக்கு கடுமையான ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. முதல் அலையின் போது பலர் மரணம் அடைந்த நிலையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலையின் போது பாதிப்பு எண்ணிக்கை அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து உச்சத்தினை அடைந்து வந்தது.

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம், கோவில்கள் திறப்பு? ஐகோர்ட் மறுப்பு!

நமது அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரு மாதங்களாக அதிகமாக இருந்து வந்தது. இதனால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அங்கு அதிகரித்து வருகின்றது. இதனால் அங்கு 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போது கேரளாவில் தொற்று பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்து வருகின்றது. இப்படியாக இருக்க, 6 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!