இந்தியாவில் கொரோனாவின் 3 மற்றும் 4வது அலை பரவல் – மருத்துவ நிபுணர் எச்சரிக்கை!!
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், 3 வது மற்றும் 4வது அலையும் பரவ வாய்ப்புள்ளதாக அமெரிக்க மருத்துவ நிபுணர் எச்சரித்துள்ளார்.
தொற்று பாதிப்பு:
கொரோனா தொற்று கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் ஒரு நகரத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டது. ஒரு சில மாதங்களில் கொரோனா தொற்று உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவி விட்டது. அதன் பின்னர் தான் உலக நாடுகளுக்கு தொற்றின் தீவிரம் புரியத் தொடங்கியது. 2020 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் தொற்று பரவ தொடங்கியது. இதனால் மார்ச் மாத இறுதியில் இருந்து நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் – மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!!
ஊரடங்கினால் கொரோனாவின் முதல் அலையில் இருந்து இந்தியா படிப்படியாக மீண்டு வந்தது. 2020 இறுதியில் பாதிப்புகள் குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. மீண்டும் 2021 மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டில் பரவத் தொடங்கியது. பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்ததால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த ஆண்டை விட இம்முறை பாதிப்புகள் எதிர்பாராத வகையில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது மற்றும் நான்காவது அலை மீண்டும் பரவ வாய்ப்பிருப்பதாக அமெரிக்க நோய் இயக்குவியல் மைய இயக்குனர் ரமணன் லட்சுமி நாராயணன் எச்சரித்துள்ளார். மேலும், ரெம்டெசிவிர் உயிர்காக்கும் மருந்து இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”