தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தொடக்க கல்வி பயில கூடிய மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் வகுப்பில் சேர வேண்டிய மாணவர்கள் கொரோனாவால் நேரடியாக கற்கும் அனுபவம் இல்லாமல் கற்றலில் குறைபாடுடன் இருக்கின்றனர். இந்த நேரத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
அக்.15 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தொடக்க நிலை மாணவர்கள் பள்ளிகளில் நேரடி வகுப்புகளில் பங்கு பெறாததால் அடிப்படை கல்வியினை முறையாக கற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். எழுத்துகளை மறக்கும் நிலையில் உள்ளனர். அதனால் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுகாதாரத் துறை, கல்வித்துறை வல்லுநர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
செப்.21 வரை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி!
இந்த நிலையில் நாளை (15.09.2021) வல்லுநர்கள் ஆய்வின் முடிவுகளை தமிழக முதல்வரிடம் அளிக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு உயர் வல்லுநர் குழுக்களுடன் ஆய்வு செய்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து நெறிமுறைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான இலவச பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.