தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – தூய்மை பணிகள் தீவிரம்!

2
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - தூய்மை பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - தூய்மை பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – தூய்மை பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். எனவே வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்ததால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தாக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. எனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – அக்.23 மெகா முகாம்!

எனவே நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு அவர் கூறியதாவது,

உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான வகுப்பறைகள், ஆய்வகம், பள்ளி வளாகம், கழிப்பறைகளை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். 3, 5, 8, 10-ஆம் வகுப்பு மாணவா்களை தேசிய திறனறி ஆய்வு தோ்வுக்கு தயாா் செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு புதிய தோ்வு மையம் கோரும் தலைமை ஆசிரியா்கள் அதற்கான கருத்துருவை வருகிற அக்.18ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

மேலும் 2021-22-ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேவைப்படும் இலவச மிதிவண்டிகளுக்கான பட்டியலை திங்கள்கிழமைக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தை அன்றைய தேதி வரை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் பள்ளி வருகைபதிவேட்டில் தினமும் ஆசிரியர் வருகையை காலை 9.45 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. 3,5 வகுப்புகளுக்கு திறனறி ஆய்வு தேர்வு தேவையா?
    ஒரு வருடத்திற்கு மேல் வகுப்புகள்
    இல்லாத நிலையில்
    இந்த வருடம் இந்த தேர்வை ரத்து செய்யலாம் அல்லவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!