பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய வேளையில் விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு குறைந்தது ஒரு வார காலம் பள்ளிகளை காலை வேளையில் மட்டும் திறந்து, மதிய வேளைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் தற்போது தான் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மீண்டும் திறக்கப்பட்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் மாணவ, மாணவிகளை கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக சில மாநிலங்களில் சிறப்பு விடுமுறைகளும் அளிக்கப்பட்டன. மறுபுறம் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகளும் விரைவில் முடிக்கப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டது. இருப்பினும் தற்போது வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. தற்போது மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ பள்ளிகளை மூடக்கோரி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து மனு வந்தால் நடவடிக்கை – முக்கிய தகவல் வெளியீடு!
அதன்படி கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற தெற்குப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் கடுமையான வெப்பத்தின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டாலும், வடக்கு வங்காளத்திற்கு இது போன்ற நிலை இல்லை. வடக்குப் பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ டாக்டர் ஷங்கர் கோஷ், வெப்பச் சலனம் காரணமாக பள்ளியை மூடக் கோரி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின்படி, ஆரம்ப மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு பள்ளிகளை காலை அமர்வில் மட்டும் குறைந்தது ஒரு வாரமாவது திறக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
Exams Daily Mobile App Download
கடந்த சில நாட்களாக, வடக்கு வங்காளத்தில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. இந்நிலையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பிரிவு மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதில் சிரமம் இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். அனைத்து பள்ளிகளையும் காலையில் மட்டுமே வகுப்புகளை எடுக்க முயற்சிக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மாணவர்கள் மற்றும் அவர்களின் உடல்நலம் வெப்ப அலைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய பள்ளிகளுக்கு பல தளர்வுகளை வழங்குமாறு கல்வி அமைச்சகம் கூட கூறி உள்ளது.