தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக்கடலில் வலுவடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை:
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்க கடலில் கடந்த 11ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அவ்வாறு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்.20 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து வடமேற்கு வங்கக்கடல், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடலோர பகுதிகள், வட ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசப்படும் எனவும் இடையிடையே 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் – நாளை வெளியீடு!
இந்நிலையில் எண்ணூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்படவிருக்கும் பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வது பாதுகாப்பு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.