இந்தியாவில் ஒரே நாளில் 19,893 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!
நாட்டில் இதுவரை கொரோனா பெருந்தொற்று காரணமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்பு நிலவரத்தை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
கொரோனா பரவல்:
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. இதே போல் இதுவரை தொற்றால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் 2,05,22,51,408 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் மற்றும் இறப்பு விகிதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த அறிக்கையில் கூறியிருப்பது, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி நாட்டில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,26,530 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 19,893 பேர் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,40,87,037 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று தொற்றில் இருந்து 20,419 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கூடுதலாக 1030 முதுநிலை பணியிடங்கள் – ஆசிரியர் தகுதி வாரியம் அறிவிப்பு
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,34,24,029 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் 1,36,478 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 98.50% ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து சிகிச்சை பெறுவோர் விகிதமும் 0.31% ஆக குறைந்து வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரே நாளில் 38,20,676 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.